Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

வேளாண் சட்டத்திற்கு இடைக்கால தடை புதுவை முதல்வர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

புதுச்சேரி

வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை யை உச்சநீதிமன்றம் விதித்து உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் அலுவலகம் அருகே காங்கிரஸார் பட்டாசு வெடித்தனர். இனிப்புகளை வழங்கி முதல்வர் நாராயணசாமி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய போது 61 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு வரவேற்கத்தக்கது, பாராட்டுதலுக்குரியது. இந்த உத்தரவு விவசாயிக ளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங் களை திரும்ப பெற வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x