Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க கட்டண நிர்ணயக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை

கல்வி கட்டணம் தொடர்பான யுஜிசிவிதிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கும் வரை தற்கா லிகமாக 2017-18 முதல் 2020-21-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்துக்கு புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர் ணயிக்க, புதுச்சேரி கட்டண நிர் ணயக் குழுவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘புதுச்சேரியில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயிக்க புதுச்சேரி கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும். ஏனெனில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 14லட்சம் கட்டணமாக நிர்ணயித் துள்ள போதும் 40 முதல் 50 லட்சம் வரை கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்துவது சட்டவிரோதமானது, என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தற்காலிகமாக ரூ. 10 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவை ஏற்கெனவே பிறப்பித்தது. மேலும் தனியார் சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தனியாக குழு அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போல கட்டணம் நிர்ணயம் செய்வ தற்கான விதிகளை வகுக்க குழு அமைக்கப்பட்டு, விதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த விதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது, என தெரிவிக்கப்பட்டது

ஆனால் தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் 2021-22-ம் கல்வி ஆண்டில் இதுதொடர்பாக உரிய விதிகள் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், கட்டணம் நிர்ணயம் தொடர்பான யுஜிசியின் விதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறும் வரை தற்காலிகமாக கடந்த 2017-18 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்துக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்என புதுச்சேரி கட்டண நிர் ணயக்குழுவுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த கட்ட ணத்தை விட ஒருவேளை பல்க லைக்கழகங்கள் கூடுதலாக கட்ட ணம் வசூலித்து இருந்தால் அதைதிருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களுக்கு உத்தர விட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x