Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

மதுரையில் மீண்டும் வன்முறை தலைதூக்கி வருகிறது பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

மதுரையில் மீண்டும் வன்முறை தலைதூக்கி வருகிறது. இதை முளை யிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டார்.

மதுரை மேலமடையில் மாவட்ட பாஜக அலுவலகத்தைச் சேதப் படுத்தியோரைக் கண்டித்து அண்ணா நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் மாவட்டத் தலைவர் மகா சசீந்திரன் தலைமை வகித்தார்.

இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது:

பாஜக நடத்தும் நம்ம ஊர் பொங்கல் விழாவுக்கு விடுதலை சிறுத்தைகளும், எஸ்டிபிஐ கட்சியும் இடையூறு செய்துள்ளன. மதுரையில் மீண்டும் வன்முறை தலைதூக்கி வருகிறது.வன்முறையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். திருமாவளவன், எஸ்டிபிஐயை வளர்த்து விடுவது தமிழகத்துக்கு ஆபத்தாக அமையும்.மதுரையில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு ஹெச்.ராஜா பேசினார்.

இதில் பாஜக பொதுச் செயலர் ஆர்.நிவாசன், வேலூர் இப்ராகிம், மதுரை மாவட்டப் பார்வையாளர் கதலி நரசிங்கப் பெருமாள், நகர் மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன், முன்னாள் தலைவர் சசிராமன், துணைத் தலைவர் ஹரிகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x