Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
தேனி மாவட்டத்தில் பழனிசெட்டி பட்டி, துரைராஜபுரம், அம்மா பட்டி, பொட்டிபுரம், உப்புக் கோட்டை, கூழையனூர், அம்பாசமுத்திரம், போடிமெட்டு ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை துணை முதல்வர் கடந்த மாதம் தொடங்கி வைத் தார். இதைத் தொடர்ந்து கோகிலாபுரம், சீப்பாலக் கோட்டை, தேக்கம்பட்டி உள் ளிட்ட பல பகுதிகளிலும் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நேற்று சீலையம்பட்டி, தர்மா புரி, குப்பிநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், தாடிச்சேரி, அரண்மனைப்புதூர் ஆகிய 6 ஊராட்சிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மினி கிளி னிக்கை தொடங்கி வைத்தார். சீலையம்பட்டியில் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார். இதில் எஸ்டிகே. ஜக்கையன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் க.ப்ரிதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT