Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
சேலம்: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம் தொடக்க விழா சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
பிரச்சார வாகனத்தை சேலம் ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்து கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் வரும்போது கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இத்தொற்று தொடர்பாக பிரச்சார வாகனம் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் 15 நாட்களுக்கு வாகனம் மூலம் குறும்படம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார், சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT