Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

மதுக்கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு வரும் 15, 26 மற்றும் 28-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வரும் 15-ம் தேதி திருவள்ளுவர் தினம், 26-ம் தேதி குடியரசுதினம், 28-ம் தேதி வள்ளலார் நினைவுதினம். எனவே, இந்த நாட்களில் தருமபுரி மாவட்ட டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த மது அருந்தகங்கள், மதுபானம் விற்க உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு,இந்த குறிப்பிட்ட 3 நாட்களில் விடு முறை அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் யாரேனும் மதுக் கடைகளை திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x