Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

எண்ணேகொல் கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி

எண்ணேகொல் கால்வாய் திட்டத்துக்கான கால்வாய் அமைக்கும் பணியினை விரைவில் செயல் படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ள தாவது:

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள எண்ணேகொல் அணைகட்டை உயர்த்தி கட்டி, தெற்கே தருமபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி அணைக்கும், வடக்கே படேதலாவ் ஏரி வரையிலும் புதிய கால்வாய் அமைத்து, அந்த வழியில் பல ஏரிகளுக்கு இணைப்பு கால் வாய் அமைத்து, தண்ணீர் சென்றடைய நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக கிருஷ்ண கிரியில் நடந்த நிகழ்ச்சியில் தாங்கள் அறிவித்தீர்கள். ஆனால் அதிகாரிகளோ கால்வாய் அமைப்பதற்கு சர்வே செய்து, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கடும் வறட்சியால் சிக்கி தவிக்கும் விவசாயிகள் நலன் கருதி இந்த கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x