Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை யில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் (35) ஓட்டிச் சென்றார். மாற்று ஓட்டுநரான விஜயசேகர் (37) என்பவர் உடன் சென்றார்.

லாரி நேற்று அதிகாலை தருமபுரியைக் கடந்து தொப்பூர் கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர் மீடியனில் மோதி தேசிய நெடுஞ்சாலையிலேயே கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர்கள் இரு வரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தொப்பூர் காவல் துறையினரும், பாளையம் சுங்கச் சாவடி நிர்வாக பணியாளர்களும் இணைந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 3 கிரேன் வாகனங் களின் உதவியுடன் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்தப் பணியின்போது, சேலம்-தருமபுரி மார்க்க ஒருவழிச் சாலைப்பகுதி, விபத்துப் பகுதியில் இருவழிச் சாலையாக மாற்றியமைக்கப் பட்டு வாகனங்கள் மிதமான வேகத்தில் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x