Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
திருச்சி : திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் ஜன.15 முதல் 17-ம் தேதி வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் விடுமுறை நாட்களில் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு சுற்றுலா தலம் மற்றும் புளியஞ்சோலை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன.15 முதல் 17-ம் தேதி வரை இந்த சுற்றுலா தலங்கள் மூடப்படும்.
அரசு மேற்கொள்ளும் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT