Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் மாதாந்திர கூட்டம் பெரம்பலூரில் அவ்வியக்கத்தின் மாநில துணைத் தலைவர் க.பெரியசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் ஜி.சிவக்குமார், இணைச் செயலாளர் சவுந்தர்ராஜன், பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். நோயாளிகளின் நலன் கருதி மருந்துப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். விசுவக்குடி நீர்த்தேக்கம் மற்றும் லாடபுரம் மயிலூற்று அருவி பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக அறிவித்து பெரம்பலூரில் இருந்து அரசு நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT