Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
கரூர்: கரூர் மாவட்டகூட்டுறவு இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர்கள் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த டிச.6-ம் தேதி கரூர் அரசு கலைக்கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்றது. 307 பேருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்ட நிலையில் 210 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் இன்று www.drbkarur.net என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது. நேர்முகத்தேர்வு வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனுமதிச்சீட்டை இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT