Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
இந்திய கப்பல்படையின் சார்பில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 2 நாட்கள் நடைபெறும் சீ விஜில் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது.
இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், கடலோர காவல் நிலைய போலீஸார் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். படகுகளில் கடலுக்குள் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT