Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட சமுதாய தலைவர்கள் சந்திப்பு நேற்று காரைக்காலில் நடைபெற் றது. இதில் பங்கேற்ற அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவர் எம்.முஹமது ஷேக்அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியது:
இளைஞர்களை பாதிக்கும் வகையில் காரைக்கால் மாவட் டத்தில் பெரும்பாலான பகுதிக ளில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட் கள் விற்பனை செய்யப்பட்டு வரு வதை வன்மையாகக் கண்டிக்கி றோம். காரைக்கால் காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து, போதை பொருட்கள் விற்கப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். புதுச்சேரியில் மின் துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து போராடும் மின் துறை ஊழியர்களின் போராட்டம் நியாயமானது. இந்த போராட்டத்துக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துணை நிற்கும். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, முதல்வர் நாராயணசாமி மேற் கொண்ட போராட்டத்தை வரவேற் கிறோம். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT