Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெடிகுண்டு வீச்சு, இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் தம்பிக்கைமீண்டான் கிராமத்தை சேர்ந்த வீரபெருமாள் மகன் ஜெயமுருகன் ( 45). இவர் கடந்த 25.03.20 அன்றுகூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்வதற்காக, மாப்பிள்ளையூரணி பகுதியில் ஒரு வீட்டில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். அப்போது, அந்த வெடிகுண்டு வெடித்து வீடு சேதம் அடைந்தது. இது தொடர்பாக, கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தனர். ஜெயமுருகன் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். மேலும், இவர் மீது சிப்காட், ஆத்தூர், நெல்லை, முத்தையாபுரம் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையங்களில் இரட்டை கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கீழஈரால் பகுதியில் பதுங்கியிருந்த ஜெயமுருகனை தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT