Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி(27). இவர் பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பழகி, அவர்களை வீடியோ எடுத்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். இவர் மீதான புகார்களை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே காசி மீது கந்துவட்டி வழக்கு தொடர்பாக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் வழக்கு தொடர்பாக குற்றபத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். சென்னையைச் சேர்ந்த பெண் கொடுத்த புகார் மீதான வழக்கில் நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் 400 பக்கங்கள் அடங்கிய குற்றபத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில் காசி மீதான வழக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. காசி மீது மேலும் இரு பாலியல் வழக்குகள் இருப்பதால், இவ்வழக்கிலும் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT