Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

துரிஞ்சாபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ‘தை மகளை வரவேற்கும் தங்கத் தமிழ் மகள்கள்’ என்ற தலைப்பில் சமத்துவ பொங்கல் விழா தி.மலை அடுத்த துரிஞ்சாபுரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா வரவேற்றார். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை போற்றுவோம் என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x