Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

அதிமுக எம்எல்ஏ மீது புகார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறித்து மோகன் எம்எல்ஏ அவதூறாக பேசியதா கக் கூறி, திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆரணி நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆரணி நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்தி அளித்துள்ள புகாரில், “ஆரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடும் பொது இடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டா லின் மற்றும் உதயநிதி குறித்து எம்எல்ஏ மோகன் அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு, சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தை பல்வேறு தரப்பினர் பார்த்து வருகின்றனர். அவரது பேச்சு, எனக்கும், நான் சார்ந்துள்ள கட்சியின் உறுப்பினர்களுக்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எம்எல்ஏ மோகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x