Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

திருப்பத்தூர் பெருமாள் கோயிலில்ஆண்டாள் திருக்கல்யாண வைபோகம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் வீட்டு வசதிவாரியம் பகுதி-1-ல் பிரசித்திப்பெற்ற நிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதம் ஆண்டாள் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலை 5 மணி முதல் 6 மணி வரை திருப்பாவை உற்சவம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஆண்டாள் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x