Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

ஆம்பூர் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூரில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இத்திட்டத்துக்காக பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாததால் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.

ஒரு சில சாலைகளில் பணிகள் முடிந்தபிறகும், மண்ணை கொண்டு பள்ளங்கள் மூடப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக சாலைகள் மாறி யுள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். கன மழையால் சேதமடைந்த சாலை களை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘டாலர் சிட்டி என அழைக்கப்படும் ஆம்பூர் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், மக்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளை மேம்படுத்தி தருவதில் கடைசி இடத்தில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் அனைத்துச் சாலைகளும் தோண்டப் பட்டுள்ளன.

குழாய்கள் புதைக்கப் பட்ட சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. எங்கு பார்த்தாலும் குப்பைக்கழிவுகள் குவிந்துக் கிடக்கின்றன. கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருக்கிறது.

நகராட்சி துப்புரவுப் பணி யாளர்கள் குப்பைக்கழிவுகளை அகற்றவராததால் பல இடங்களில் குப்பைக்கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆம்பூர் மக்கள் அதிகம் வந்து செல்லும் சாலைகளான மோட்டுக்கொல்லை, கஸ்பா மெயின் ரோடு, எஸ்.கே.ரோடு, கிருஷ்ணாபுரம் சாலை, இந்திரா நகர், பழக்கடை பஜார் உள்ளிட்ட சாலைகள் கடந்த 2 நாட் களாக பெய்து வரும் மழையால் சேறும், சகதியுமாக உள்ளன.

ஆம்பூர் பழக்கடை பஜார் சாலை 20 அடி சாலையாக இருந்தது. அங்குள்ள வியாபாரிகள் சாலையின் இருபுறமும் ஆக்கிர மித்து கடைகளை விரிவுப் படுத்தியுள்ளதால், 20 அடி சாலை தற்போது 10 அடியாக சுருங்கிவிட்டது. கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழி யில்லாமல் பழக்கடை சாலையில் குட்டைப்போல் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது.

பாதாள சாக்கடை திட்டத் துக்காக தோண்டப்பட்டு சாலை சரிவர மூடாததாலும், சரக்கு வாகனங்கள் இச்சாலை வழியாக அடிக்கடி வந்து செல்வதால் பழக்கடை பஜார் சாலை மிகவும் சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இவ்வழியாகதினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைத்துத் தர வேண்டும்.

அதுமட்டுமின்றி ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்துசாலைகளையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென் றால் மக்கள் ஒன்றுகூடி போராட் டத்தில் ஈடுபடுவது தவிர வேறுவழியில்லை’’ என்றனர்.

இது குறித்து ஆம்பூர் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவுறும் நிலையில், பணிகள் முடிவுற்றப்பகுதி களில் சோதனை ஓட்டம் நடத்தி சாலைகளை சீரமைக்கப்பட உள்ளன. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சில பணிகளை செய்ய முடிய வில்லை. சாலை ஆக்கிரமிப்பு களையும் கவனித்து வருகிறோம்.

விரைவில், ஆக்கிரமிப்பு களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x