Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

கிராமப்புற மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி

அணைக்கட்டு வட்டத்தில் கிராமப் புற மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளிக்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் அணைக் கட்டு சதுரங்க கழகத்தின் 2021-ம் ஆண்டின் முதல் செயற்குழு கூட்டம் வேலூர் சாயிநாதபுரம் கிரியா அகாடமி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு சதுரங்க கழக செயற்குழு தலைவர் பாலகணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், புதிதாக பொறுப் பேற்ற செயலாளர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில், அணைக்கட்டு வட்டத்தில் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி வழங்குவது, செயற்குழு உறுப்பினர்களை அதிகரிப்பது, அணைக்கட்டு சுற்றுவட்டாரங்களில் புதிதாக சதுரங்க கழகங்களை உருவாக்குவது, கரோனா முடிவுற்ற பிறகு போட்டிகளை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது. முடிவில், பொருளாளர் பிரபு நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x