Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM
தொழில் துறை, கல்வித் துறை, முதலீடு, வங்கித் துறை மற்றும் நிதி சார்ந்த அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் முகமாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு உருவான பிறகு நேரடி உரையாடலுக்கு தகவல் தொழில்நுட்பம் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதன் சாதக அம்சமாக மக்கள் வீட்டிலிருந்தபடியே பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வழியேற்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தகவல் பரிமாற்றம் என்பது இணையதளம் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. இது இளம் தலைமுறையினருக்கு ஒரு நல்வாய்ப்பாகும். இது உள்நாட்டு தொழிலுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவில் தொழிலை மேற்கொள்ளவும் வழியேற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஒரு வாய்ப்பை உருவாக்கும் தளமாக பிராரம்ப் அமையும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT