Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM
கோவை சிங்காநல்லூர் அருகேபாரதி நகரில் தனியாருக்குச் சொந்தமான மருந்துக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை கிடங்கிலிருந்து புகை வந்ததைப் பார்த்த இரவுக் காவலாளி, பீளமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் பீளமேடு, கணபதி, சூலூர், கோவை தெற்கு தீயணைப்பு வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைத்துக் கொண்டிருந்தபோதே, கட்டிடத்தின் முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT