Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,362 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார்.
கால்நடைத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் மதகை திறந்துவைத்தார்.
நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து உரிய இடைவெளிவிட்டு ஐந்து சுற்றுகளாக மொத்தம் 9,500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்படும்.
11-ம்தேதி முதல் பிரதான கால்வாயில் விநாடிக்கு 250 கன அடி வீதமும், அடுத்து வரும் நாட்களில் தண்ணீர் அளவு 950 கன அடியாகவும் உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடராஜன், தனியரசு, கந்தசாமி, திருமூர்த்தி அணை கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர்கள் கோபி, பழனிவேல், உதவி செயற் பொறியாளர்கள் காஞ்சித்துறை, புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடைமடை விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் செல்வதை உறுதி செய்ய ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT