Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

ஓய்வுபெற்ற நீதிபதி திமுகவில் இணைந்தார்

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் நேற்று இணைந்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் நேற்று இணைந்தார். அவரை வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிரணி செயலாளர் கனிமொழி, தலைமை சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, சட்டதிட்டத் திருத்தக் குழுச் செயலாளர் பி. வில்சன், வழக்கறிஞர் விக்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x