Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் தீபாராம்(25). இவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தார். வெளியிடங்களுக்கும் இந்தப் பொருட்களை அனுப்பி வந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்குகள் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தீபாராம் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்திரமேரூர் போலீஸார் கோப்புகளை அனுப்பினர். இந்த கோப்புகளின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவின் அடிப்படையில் தீபாராம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x