Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

விழுப்புரம் மாவட்ட சாலை பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு

விழுப்புரம்

சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் பல்வேறு சாலை பாது காப்பு உபகரணங்களை வாங்கு வதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 61 ஆயிரத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, விழுப்புரம் மாவட் டத்தில் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.16 லட்சத்து 60 ஆயிரத்து 95 மதிப்பீட்டில் பல்வேறு உபகரணங்கள் கொள்முதல் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட் டத்தில் தேர்வு செய்யப்பட்ட 12 மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x