Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வளர்க்கும் பெண்கள் டோக்கன் பெற ஆர்வம்

காளைக்கு டோக்கன் வாங்க வந்த பெண்.

மதுரை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பெண்கள் தாங்கள் வளர்க்கும் காளைகளுக்கு டோக்கன் பெறக் குவிந்தனர்.

கடந்த காலத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை பெரும்பாலும் ஆண் களே வளர்த்தனர். அது போல் காளைகளை அடக்கும் வீரர்களும் ஆண்களே. ஜல்லிக்கட்டு முழுக்க முழுக்க ஆண்களுக்கான போட்டி யாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பெண்கள் வளர்க்கும் காளைகள் போட்டியில் அதிகளவு பங்கேற்க ஆரம்பித்தன. அதேபோல் திருநங் கைகளும் காளைகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆண்டும் பெண்கள் தாங்கள் வளர்க்கும் காளை களுக்கு தகுதிச் சான்று பெறவும், அவனியாபுரத்தில் டோக்கன் பெறவும் நேற்று குவிந்தனர். காளைகளைப் போட்டிக்கு அழைத்து வர அவர்கள், ஆர் வமாக முன் வந்து கரோனா பரி சோதனையும் செய்தனர்.

இனி காளைகள் பரிசோதனை, டோக்கன் வழங்கும் நிகழ்வுகளில் பெண்களுக்கு தனி வரிசை ஏற் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x