Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங் கேற்க உள்ள காளைகளின் உரிமை யாளர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. அலங்கா நல்லூர், பாலமேட்டில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
அவனியாபுரத்தில் ஜன.14, பாலமேட்டில் ஜன.15, அலங்காநல்லூரில் ஜன.16-ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள காளைகளின் உரிமையாளர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது.
இதற்காக அவனியாபுரம் பிஎம்எஸ் பள்ளியில் நேற்று முன்தினம் இரவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளின் உரிமை யாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆரம்பத்தில் 300 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்க திட்ட மிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பரிசோதனையின்போது காளையின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அந்த காளை மற்றும் அதைச் சார்ந்த குழுவினரை போட்டியில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கூடுதல் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டு இதுவரை 850 டோக்கன்கள் வழங் கப்பட்டுள்ளன.
பாலமேடு, அலங்காநல்லூர்
பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகளின் உரிமையாளர் களுக்கு நேற்று அனுமதி டோக் கன்கள் வழங்கப்பட்டன. இதை பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமானோர் திரண்டனர். ஒவ்வொரு இடத் திலும் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர் களை ஒழுங்குபடுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
இரு இடங்களிலும் 800-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்ற காளை உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அனுமதி டோக்கன் பெற்றாலும் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT