Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

போடியில் இளைஞர் வெட்டி கொலை

போடி கீழசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஒண்டிவீரன்(47). இவ ரது மகன் ரவிக்குமார்(24). இவர் கோயம்புத்தூரில் உள்ள கோழிப்பண்ணையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஒண்டிவீரன் தேடிச் சென்றார். அப்போது அருகில் உள்ள புளியந்தோப்பு கிணறு அருகே ரவிக்குமார் கழுத்து, கை வெட் டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

போடி தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் வேல்மணிகண்டன் விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x