Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
தேனியைச் சேர்ந்த அமாவாசை, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தேனி ஆவினில் 22 பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கடந்த நவம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தேனி ஆவின் ரூ.2.50 கோடி நஷ் டத்தில் இயங்குவதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பணியிடங்களை நிரப் பினால் ஆண்டுக்கு ரூ.6 கோடி ஊதியம் வழங்க வேண்டும். எனவே 22 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப் பாணையை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.
அந்த அறிவிப்பாணையைச் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மனு தொடர்பாக பால் உற்பத்தியாளர் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர் 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT