Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
மானாமதுரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந் தனர்.
மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்கண்ணா (27). இவரது நண்பர், மானாமதுரையைச் சேர்ந்த அருள்நாதன் (எ) மைனர் மணி (27). இருவர் மீதும் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஜன.9-ம் தேதி இரவு மானாமதுரை நீதிமன்றம் எதிரே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 5 பேர் கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டியதில் அருள்நாதன் உயிரிழந்தார்.
வினோத்கண்ணா மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர்புரம் மிதுன்மாணிக்கம்(21). மானாமதுரை வசந்தசரண்(22), சங்கர்(19), திருப்பாச் சேத்தி ராஜ்குமார்(22) ஆகியோர் முதுகுளத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: மானாமதுரை அருகே வினோத்கண்ணா தரப்பும், மிதுன்மாணிக்கம் தரப்பும் தனித்தனியாக மது அருந்தியுள்ளனர். அப்போது அருள்நாதன் தரப்பினர் மிதுன்மாணிக்கத்திடம் ‘வெளியூரில் இருந்து வந்து இங்கே மது அருந்துகி றாயா?’ என்று கூறி தாக்கினர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மிதுன்மாணிக்கம் தனது நண்பர் களுடன் மானாமதுரை அருகே பைக்கில் சென்றபோது மீண்டும் அருள்நாதனும், வினோத்கண்ணாவும் தகராறு செய்துள்ளனர். இதனால் மிதுன் மாணிக்கம் தரப்பினர் அருள்நாதன், வினோத்கண்ணாவை வெட்டினர். இவ்வழக்கில் மேலும் சிலரை தேடி வருகிறோம் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT