Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

சிவகங்கை மக்களை ஏமாற்றிய கார்த்தி சிதம்பரம்அமைச்சர் ஜி.பாஸ்கரன் குற்றச்சாட்டு

சிவகங்கை தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிலாளர்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். நாகராஜன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். அமைச்சர் ஜி.பாஸ்கரன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ஒக்கூரில் மினி கிளிக்கை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: கரோனா காலத்தில் கஷ்டத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கியவர் முதல்வர். அவர் யார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். பொங்கல் சமயத்தில் மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகப் பரிசுத் தொகுப்பை வழங்குகிறார்.

இந்தத் தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் ஏமாற்றி விட்டார். ஆனால் அவர் தேர்தல் வந்ததும் காரில் வண்ண, வண்ணக் கொடியுடன் வாக்குக் கேட்டு வந்துவிடுவார். அவரிடம் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேளுங்கள். ஆனால் நாங்களோ மக்களிடம் நேரில் சென்று குறைகளைக் கேட்டு உடனே நிவர்த்தி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x