Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

சிறுவன் ஓட்டிய பைக் மோதி ஒருவர் மரணம் பெரியப்பாவை கைது செய்த போலீஸார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சோழாந்தூர் அருகே வடவயலைச் சேர்ந்தவர் கருப்பையா(50). இவர் கடந்த 8-ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பிச்சங்குறிச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் கருப்பையா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் 17 வயது சிறுவனை அவரது பெரியப்பா தனபாலன்(49) என்பவர் தனது பெயரில் உள்ள இரு சக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்தது தெரிய வந்தது. அதனையடுத்து தனபாலன் மீது திருப்பாலைக்குடி ஆய்வாளர் கஜேந்திரன் வழக்குப் பதிவு

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளை எந்த வாகனத்தையும் இயக்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. விதிமுறைய மீறி வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x