Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
நாமக்கல்: உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்செங்கோடு அருகே 15 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் புகளுர் முதல் சத்தீஸ்கர் மாநிலம் ரெய்காட் வரை 800 கிலோ வாட் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல மின்கோபுரம் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் திருச்செங்கோடு அருகே சிக்கநர்கன்பாளையம் உள்பட 15 கிராமங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். தொடர்ந்து உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்ட விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சட்டப்படி சந்தை மதிப்பில் இருந்து 200 சதவீதம் நிலமதிப்பு உயர்த்தி வழங்க வேண்டும். மரம் பயிர்கள் போன்றவற்றிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT