Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஒப்பந்த சாகுபடி சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோடு பெருந்துறை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட எம்.பி. கணேசமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த சாகுபடி சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளை சிதைக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

முன்னதாக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x