Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
சேலம்: சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி., சந்திரமவுலி தலைமையிலான போலீஸார் நேற்று பிற்பகலில் சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பறிமுதல் செய்தனர். சோதனை இரவு வரை நடந்தது.
மேலும், இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT