Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

ஓசூர் உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி திமுக உண்ணாவிரதம்

கரோனா எதிரொலியாக கடந்த 9 மாதங்களாக ஓசூரில் மூடப்பட்டுள்ள உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி மேற்கு மாவட்ட திமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஓசூர் ராம்நகரில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஓய்.பிரகாஷ் தொடங்கி வைத்தார். கடந்த 9 மாதங் களாக உழவர்சந்தை மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொங்கல் திருநாளுக்கு முன்பாக உழவர்சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன், ஓசூர் எம்எல்ஏ சத்யா, யுவராஜ், சுகுமாரன், மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x