Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

திருச்சியில் இன்று முதல் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்

திருச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி மாநகரில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இன்று(ஜன.12) முதல் ஜன.19-ம் தேதி வரை செயல்படும்.

தஞ்சாவூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் கன்டோன்மென்ட் சோனா, மீனா தியேட்டர் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலை யத்தில் இருந்து இயக்கப்படும். புதுக்கோட்டை, மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள், மன்னார்புரம் ரவுண்டானா அருகிலிருந்து இயக்கப்பட உள்ளன. மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மன்னார்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்குச் சென்று வருவதற்காக, மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அதிகளவிலான நகரப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகரில் எங்கேனும் விதி மீறல் காணப்பட்டால் அதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கும், காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 96262 73399 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூல மாகவும் தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x