Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
தென்காசி: தென்காசி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் நரேந்திரகுமார் என்ற அரவிந்த் (28). இவர், அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நரேந்திரகுமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தென்காசி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT