Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

தேசியப் போட்டிகளில் பதக்கம் வென்றவிளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை

திருநெல்வேலி: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 23 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க உதவித் தொகையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வழங்கினார்.

2018-2019-ம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பயிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய அளவில் சிலம்பம், நீச்சல், தடகளம், பளு தூக்குதல், வாலிபால் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டது. முதலிடம் பெற்றவருக்கு ரூ.6 ஆயிரம், 2-ம் இடம் பெற்றவருக்கு ரூ.4 ஆயிரம், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 23 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்க உதவித் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x