Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM
தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி செயலர் மற்றும் முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி வளாகத்தில் மாணவிகள் பொங்கலிட்டு வழிபட்டனர். பேச்சுப்போட்டி, கோலப்போட்டி, கவிதைப் போட்டி, நவதானியங்களைக் கொண்டு பொங்கலிடும் போட்டி, உறியடி போட்டி போன்றவை நடைபெற்றது.
போட்டிகளில் மருதக்கனி, பிரிஸ்கி, பூமாரி, ஸ்டெல்லா, பவித்ரா, ஜெபமணி, செல்வமேரி, சிந்தியா, மகேஷ்ரத்னா, ஐஸ்வர்யா ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவிகள் கிருபா, சக்திபாலா, அகல்யாவேணி ஆகியோர் உரையாற்றினர்.
மாணவி ரஞ்சனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி ஆலோசகர் தமிழரசன், அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார், துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT