Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

நெல்லையில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது பெய்துவரும் தொடர் கனமழை, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைப்பகுதிகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் வரத்து ஆகியவற்றால் தாமிரபரணி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆற்றின் உட்புறமுள்ள தண்ணீர் ஏற்றும் கிணறுகள் அனைத்தும் மூழ்கிய நிலையில் வெள்ளம் செல்வதால் திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டல பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மோட்டாரை இயக்க இயலாத நிலை உள்ளது. இதனால் மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு எண் 28 முதல் 38 வரையிலான பகுதிகளுக்கு இன்று (12-ம் தேதி) மட்டும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து பருக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x