Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழ ஆம்பூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் ஆனந்தராஜ் (27). இவர், கடந்த 9-ம் தேதி மாலையில் தனது சித்தப்பா கணேசன் மற்றும் இவரது மகன் முத்து ஆகியோருடன் அருகில் உள்ள கடனா நதிக்கு குளிக்கச் சென்றார். அப்போது, ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் ஆனந்தராஜ், முத்து ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதைப் பார்த்த கணேசன், 2 பேரையும் மீட்க முயன்றார். முத்துவை மட்டும் போராடி மீட்டுள்ளார். ஆனந்தராஜை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்தி னர் அங்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஆனந்தராஜ் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x