Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். பணியில் இருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுகள் 20 பேருக்கு பணி நியமன ஆணைகளை எஸ்பி வழங்கினார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் 19 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x