Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM
பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு பகுதியில் மஞ்சள் குலை அறுவடைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வெளி மார்க்கெட்டில் ஒரு மஞ்சள் குலை ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மந்தித்தோப்பைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ``மந்தித்தோப்பு பகுதியில் மொத்தமாக மஞ்சள் பயிரிடுவது இல்லை. 10 சென்ட், 20 சென்ட் என மொத்தம் 5 ஏக்கர் வரை மஞ்சள் குலை பயிரிட்டுள்ளனர். இது 6 மாத பயிராகும். மற்ற பயிர்களை போலவே இதற்கும் கூலி ஆட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஆனால், நாங்கள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மஞ்சுள் குலை கடைசி நேர வியாபாரம் என்பதால் கடந்த ஆண்டைபோல் இல்லாமல் இந்தாண்டு ஓரளவு விலை கிடைக்கும் என் நம்புகிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT