Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முத்து (33). இவர், நேற்று முன்தினம் காலை சென்றார். அதன்பிறகு இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி வேதவல்லி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் முத்துவை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கருப்பனூர் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் முத்து உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் முத்துவின் உடலை மீட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT