Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் வழிப்பறி

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே மிளகாய் பொடியை தூவி இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தி.மலை பே கோபுரத் தெருவில் வசிப்பவர் இளங்கோவன். இவரது மகன் சஞ்சய்(22). இவர், தனது தாய் சத்யாவுடன், தண்டராம்பட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று வந்துள்ளார். ராதாபுரம் அருகே வந்தபோது, அவர்கள் மீது ஒரு கும்பல் மிளகாய் பொடியை தூவியுள்ளது. இதனால், இரு சக்கர வாகனத்தை சஞ்சய் நிறுத்தியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, சத்யா வைத்திருந்த பணப் பையை பறித்துக் கொண்டு மர்ம கும்பல் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. அந்த பையில் ரூ.4,200 மற்றும் ஒரு செல்போன் ஆகியவை இருந்துள்ளது. இது குறித்து தண்டராம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x