Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

குறைதீர்வு கூட்டத்தில் 325 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் 325 மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், முதியோர் உதவித் தொகை, பட்டா இடமாற்றம், குடும்ப அட்டை, கல்விக்கடன் உள்ளிட்ட 325 மனுக்கள் வரப்பெற்றன. இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தாரகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x