Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் பழனிசாமியை தரக்குறைவாக விமர்சித்து வரும் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும் அரக்கோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சு.ரவி தலைமை தாங்கினார். இதில், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் முகமது ஜான், சோளிங்கர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத், முன்னாள் மாவட்டச் செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பங்கேற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT