Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM
மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அம்மாநில அரசு குறைத்துள்ளது. இது பழிவாங்கும் செயல் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் உ.பி. ஆளுநர் ராம் நாயக், எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்ட சில தலைவர்களின் பாதுகாப்பை மகாராஷ்டிர அரசு குறைத்து உத்தரவிட்டது.
இதுதொடர்பாக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யே கூறும்போது, “இது ஆளும்கட்சிகளின் பழிவாங்கும் செயலாகும். ஆளும் கட்சிகள் வேண்டுமென்றே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.
தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிர மேலவை உறுப்பினராக தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்னாள் அமைச்சர் சுதிர் முங்கந்திவார் ஆகியோரின் பாதுகாப்பை வாபஸ் பெற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT